ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் நாட்டை முந்திய யாழ்ப்பாணம் ஆறு இலட்சம் பேர் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 16 இலட்சம் லிட்டர் சாராயம் விற்பனை

ஆறு இலட்சம் பேர் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 16 இலட்சம் லீற்றர் சாராயம் விற்பனை2012ம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.6 மில்லியன் (16 இலட்சம்) லீற்றர் மதுபானம் (சாராயம்) யாழ்.மாவட்ட மக்களால் நுகரப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புகைத்தல் மற்றும் மதுப் பழக்கத்துக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
“இது யாழ்ப்பாணத்தில் சராயம் அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றது.
பதின்ம வயதினரும், பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்களும் சாராயம் அருந்துவது அதிகரித்துள்ளது.
2007ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிபரத்தின் படி யாழ்.மாவட்டத்தில் 27 சதவீதமானோர் புகைப்பழக்கமுடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புகைத்தலினால், 15 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் பேர் வரை மோசமாக பாதிக்கப்படுகின்றனர்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

1 கருத்து:

  1. இதுவும் மகிந்தனின் சிந்தனையில ஒரு அங்கமே. எம் கலாச்சாரத்தை சீரழிக்க முனையும் எதிரிகளுக்கு துணைபோகும் குடிவெறியர். இதற்காகத் தானே காட்டிக் கொடுத்த அழித்தனர்.

    பதிலளிநீக்கு