ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்தார்ஜி நகைச்சுவை



ஒரு பெண்மணியின் கார் தொலைந்து விட்டது. புகார் கொடுக்க சர்தார்ஜி போலிசிடம் வந்தார். சர்தார்ஜி கேட்டார்,

உங்க கார் பேர் என்ன?

பேர் மறந்துவிட்டது. ‘T’லே ஸ்டார்ட் ஆகும்”

ஓ, வித்தியாசமான காரா இருக்கே! 'டீ'யிலே ஸ்டார்ட் ஆகுது. எனக்கு பெட்ரோல்ல ஸ்டார்ட் ஆகுற கார்தான் தெரியும்”

சர்தார்ஜி அடிக்கடி சமையலறைக்குள் நுழைவதும், சர்க்கரைப் பாட்டிலை எடுத்துப் பார்ப்பதுமாக இருந்தார். இதைக் கவனித்த அவரது மனைவி கேட்டார், “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”

“டாக்டர் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்.”


நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார்.

அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான்.


நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்
---------------------------------------------------------------------------------------------------------------


சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார்.
இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க.


அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், “நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்”.


யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார்.


சர்தார்ஜி சொன்னார், பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.
சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள். முதல் பணி ஒரு கார்ல குண்டு வைக்கறது.


சர்தார் 1 :டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது சர்தார்.

சர்தார் 2 கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்.



டீச்சர்: ஒரு ஊருல ஒரு வயசான பாட்டி இருந்தாங்க..

குட்டி சர்தார்ஜி: போங்க டீச்சர்! ஒரு வயசுன்னா அது பாட்டி இல்லை, சின்னக் குழந்தை..!

                                                           
சர்தார்ஜி தன் மகனை கூட்டிக் கொண்டு, டாக்டரைப் பார்க்க போனார். என்ன ஆச்சு என்று டாக்டர் கேட்டாராம். “இவன் பெட்டி சாவியை முழுங்கி விட்டான்” அதை நீங்க தான் எடுக்கனும் என்றார் சர்தார்.

டாக்டர் பையனை வாயை நன்றாக திறக்க சொன்னார். எப்போது முழுங்கினார் என்று சர்தார்ஜியை கேட்டார்.

மூன்று மாதம் தான் ஆச்சு என்றார் சர்தார்.


என்னது மூணு மாசமா?, இத்தனை நாள் என்ன பண்ணிகிட்டிருந்தீங்க?” என்று டாக்டர் கோபமாகக் கேட்டார்.


இத்தனை நாள் இரண்டாவது சாவியை உபயோகப்படுத்தியதாக சர்தார்ஜி போட்டாரே ஒரு போடு.
சர்தார்ஜி ஒரு பிஸா கடைக்குப் போய் பிஸா ஆர்டர் செய்தார்.கடைக்காரர்: 6 துண்டுகளாக வெட்டித் தரவா அல்லது 12 துண்டுகளாக வெட்டித் தரவா?
சர்தார்ஜி: 6 துண்டுகளாகவே வெட்டுங்க. என்னால 12 துண்டுகள் எல்லாம் சாப்பிட முடியாது.


சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.

சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது.

விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், "அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்" என்று கூறினார். சர்தார்ஜியோ, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.


அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.


உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.


விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.


விமானி சொன்னது இதுதான்:

நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன.
        
நண்பர்: ஏன் சம்பந்தமில்லாம, மெடிக்கல் புக் எடுத்து Blood பத்தி எல்லாம் படிச்சுக்கிட்டு இருக்கீங்க?
சர்தார்ஜி:     தொந்தரவு பண்ணாதீங்க, நாளைக்கு Blood test னு டாக்டர் சொல்லியிருக்கார்.
        
ஒரு சர்தார்ஜிக்கு 6 குழந்தைகள். அது குறித்து அவருக்கு எப்போதும் ஒரே பெருமைதான். தன் மனைவியைக் கூப்பிடும்போதெல்லாம், ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே’ என்றுதான் கூப்பிடுவார்.

அது அவளுக்குப் பிடிப்பதேயில்லை. ஒரு நாள் சர்தார்ஜி குடும்பத்தோடு ஒரு பார்ட்டிக்குக் கிளம்பினார். சர்தார்ஜியின் மனைவி நெடுநேரமாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார்.


பொறுமையிழந்த சர்தார்ஜி ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே! கிளம்பலாமா?” என்று கேட்டார்.


அதற்கு அவரது மனைவி கூறினார், “நான்கு குழந்தைகளின் அப்பாவே! கிளம்பலாம்”
ஆசிரியர்: ஒரு மனிதன் உயிர் வாழ ஆக்ஸிஜன் மிகவும் அவசியம், அது 1773 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
சர்தார்ஜி: அப்பாடா ! நல்லவேளை நான் 1773 க்கு முன்னாடி பிறக்கல !
பின்லேடனை பிடித்தால், யாராயிருந்தாலும் 5 லட்சம் பரிசு என்று போலிஸ் சொன்னவுடன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய், ‘எனக்கு 5 லட்சம் குடுங்க’ என்று கேட்டிருக்கிறார்.

ஏன் என்ற கேட்ட போலிஸ் அதிகாரி, பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.

சர்தார்ஜி சொன்னது இதைத்தான். “எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு”
        
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
        
சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க..
கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார்.

இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது..


சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.

சர்தார்ஜி ஜோக்குளால் மனம் வெறுத்துப்போன சர்தார்ஜி ஒருவர் தான் ஒரு அறிவாளி என்பதை நிரூபிக்க விரும்பினார். டாக்டரிடம் சென்று எனது தலையில் 1கிலோ மூளையை வைக்க வேண்டும். எவ்வளவு செலவாகும்? என்று கேட்டார்.



அதற்கு டாக்டர், “அது நீங்கள் யாருடைய மூளையை வைக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.



இன்ஜீனியர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1000 ரூபாயும்,



டாக்டர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1200 ரூபாயும்,



வக்கீல்கள் மூளை என்றால் கிராமுக்கு 2000 ரூபாயும் ஆகும்” என்றார்.



சர்தார்ஜி கேட்டார், “சர்தார்ஜிகள் மூளை என்றால்?


அது ரொம்ப அதிகமாகும். ஒரு கிராம் சர்தார்ஜி மூளை ரூபாய் ஒரு லட்சம்.


இதைக் கேட்டதும் சர்தார்ஜிக்கு பயங்கர சந்தோஷம். இருந்தாலும், இது மட்டும் ஏன் இவ்வளவு அதிகம் என்று டாக்டரிடம் கேட்டார்.

டாக்டர் சொன்னார், “ஏன்னா, ஒரு கிராம் மூளையை சேகரிக்க எவ்வளவு சர்தார்ஜிகளைத் தேடிப் போக வேண்டும் என்பது தெரியுமா?
நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார்.

கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார்.

வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே,


அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்.....” என்று சொல்ல,


குழம்பிப்போன சர்வர் கேட்டார், “சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?”


நம் சர்தார்ஜி சொன்னார், “ மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்”
வாடிக்கையாளர் ஒருவர் சர்தார்ஜியின் கடையில். சீக்கிரம் ஒரு பேக் கொடுங்க. ரயிலைப் பிடிக்கணும்
"ஐயோ, அவ்வளவு பெரிய பேக் நம்மகிட்ட இல்லைங்க"
சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.

அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?

சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?
இரயில் நிலையத்தில் சர்தார்ஜி அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டார்.
இராஜதானி எக்ஸ்பிரஸ் எப்ப கிளம்பும்?
“12.30 மணிக்கு”

பஞ்சாப் எக்ஸ்பிரஸ் எப்ப போகும்?
“1 மணிக்கு”

டெல்லி எக்ஸ்பிரஸ் எப்ப போகும்?
“2 மணிக்கு”

இப்படியாக எல்லா வண்டிகளின் நேரத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த பயணி பொறுமையிழந்து, “நீங்க எந்த வண்டியிலே போகப்போறீங்க?” என்று கேட்டார்.

நான் எங்கேயும் போகலை. தண்டவாளத்தைக் கடக்கணும்!

சர்தார்ஜி ஒருவர் எலக்ட்ரீசியனாக இருந்தார். அவரிடம் பெண்மணி ஒருவர் வந்து, தனது வீட்டில் அழைப்பு மணி வேலை செய்யவில்லை என்று கூறி, அதை சரி செய்ய அழைத்தார்.
சர்தார்ஜி, “நாளை வருகிறேன்” என்றார்.


ஆனால் நாலைந்து நாட்கள் ஆகியும் அவர் வரவில்லை. அந்தப் பெண்மணி மறுபடியும் கடைக்கு வந்தார்.


ஏன் வரவில்லை..?”


ஐயோ! உங்கள் வீட்டுக்கு நாலு முறை வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் நான் அழைப்பு மணி அழுத்தினேன். யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை”
சர்தார்ஜியைப் பார்க்க அவரது நண்பர் வீட்டிற்கு வந்தார். அங்கு சர்தார்ஜி தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தார். என்ன ஆச்சு என்று அவரது நண்பர் கேட்டபோது, சர்தார்ஜி சொன்னார்: ‘எனது அம்மா இறந்துட்டாங்க’

நண்பர் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, நாளை வருகிறேன் என்று கிளம்பிவிட்டார்.


மறுநாள் போனபோது, அப்பவும் சர்தார்ஜி அழுது கொண்டிருந்தார். நண்பர் என்னவென்று கேட்டார்.


சர்தார்ஜி சொன்னார்: “என் தம்பி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசினான். அவனுடைய அம்மாவும் இறந்துட்டாங்களாம்”
சர்தார்ஜி கடைக்காரரிடம், "உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்லை. நீங்கள் பொய் சொல்லி என்னிடம் அதை விற்றுவிட்டீர்கள்!"

இல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்.

அப்ப ஏன், on பண்ணவுடனே 'ஆல் இந்தியா ரேடியோ'ன்னு சொல்லுது...?