ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!


கடைசியில் அந்த சந்தோஷ வதந்தி உண்மையாகிவிட்டது. ஆம்... இசைஞானியின் இளையமகன் யுவன் சங்கர் ராஜாவும், வைரமுத்துவின் இளையமகன் கபிலனும் கரம் கோர்த்துவிட்டார்கள் திரையுலகில். அதுவும் இசைஞானியின் ஒப்புதலுடன்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்காகத்தான் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.
யுவன் இசையில் முதல்முறையாக கபிலன் வைரமுத்து இந்தப் படத்தில் பாடல் எழுதப் போகிறார்.
இசைஞானி இளையராஜாதான் வைரமுத்துவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தன் ஆதரவை வைரமுத்துவுக்கு பல ஆண்டுகாலம் வழங்கி வந்தார்.

இருவரும் இணைந்த படங்கள் அத்தனையிலும் இசை ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது. ஆனால் கடலோரக் கவிதைக்குப் பிறகு, இருவரும் பிரிந்துவிட்டனர். அன்று தொடங்கிய பிரிவு இருவருக்குமிடையே இந்த நிமிடம் வரை தொடர்கிறது.
பாரதிராஜா படத்தில் இருவரும் இணையப் போகிறார்கள் என்று பலரும் கூறிவந்த நிலையில், அது நடக்காமலே போய்விட்டது.
இந்த நிலையில்தான் தந்தைகளால் இயலாத ஒன்றை அவரது தனயன்கள் செய்திருக்கிறார்கள். இந்த இணைவுக்கு இசைஞானியே சம்மதம் தெரிவித்ததுதான் ஹைலைட்!
இந்தத் தொடக்கம், இசைஞானி - கவிப்பேரரசு கூட்டணிக்கு வழிவகுக்கட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக