திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜநாராயணன் (32). இவர் வெப்படை பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து வந்தார். மலர்விழி தன்னுடைய 2 குழந்தைகளையும் இந்த டியூசனில் சேர்த்தார். இதற்காக அவர் தினமும் தனது குழந்தைகளை டியூசனில் கொண்டு வந்து விட்டு வந்தார்.
அப்போது டியூசன் ஆசிரியர் ராஜநாராயணன் மற்றும் மலர்விழி இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மலர்விழி திடீரென மாயமானார். இது குறித்து அவரது கணவர் சுப்பிரமணி, போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில் தனது மனைவி மலர்விழி, ராஜநாராயணனுடன் ஓடிவிட்டதாக குறிப்பிட்டு உள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக