`லத்தீன்’ மொழியில் `பென்னா‘ என்றால் `பறவையின் இறகு’ என்று பொருள். `பென்னா’ என்பதே ஆங்கிலத்தில் `பென்’ என்றும், தமிழில் `பேனா’ என்றும் மாறியது.
ஐந்தாம் நூற்றாண்டில் `இறகுப் பேனா’ வழக்கத்துக்கு வந்தது. அது 18-ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
1780-ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார். 1809-ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி `நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார்.
ஜான் ஹாக்கின்ஸ் என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு `நிப்’ செய்தார். `நிப்’பின் முனையில் `இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882-ல் வந்தது. அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு `நிப்’பை கண்டுபிடித்தார்.
1859-ல் முதல்முறையாக `ஊற்றுப் பேனா’ (`பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது. 1883-ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக