ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பர்தா அணிந்து உரையாற்றிய முதல் முஸ்லிம் பெண்

இங்கிலாந்தில் இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் மற்றும் மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் இளைஞர் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக 11 வயது முதல் 18 வயது வரையிலான இளைஞர்கள் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், மேற்கு லண்டனில் உள்ள வோக்கிங்காம் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமையா கரிம் என்ற 16 வயது மாணவி இங்கிலாந்து இளைஞர் பாராளுமன்றத்தில் உரையாற்றியது அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காரணம், தலை மற்றும் கழுத்தை மறைக்கும் வகையிலான இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடையான ஹிஜாப்பை(பர்தா) அவர் அணிந்திருந்தது தான்.
இதன்மூலம் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், ஹிஜாப் அணிந்து இளைஞர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய முதல் நபர் என்ற பெருமையை கரிம் பெற்றுள்ளார்.

1 கருத்து: