ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை லேலன்ட் 10 மாடி கட்டடத்தில் டோணியின் பிரம்மாண்ட போஸ்டர்

Ashok Leyland Appoints Dhoni As Brand Ambassodor  அசோக் லேலன்ட் நிறுவனத்தின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணி தலைவர் மஹேந்திர சிங் டோணி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னையிலுள்ள அசோக் லேலண்ட்டின் 10 மாடி அலுவலக கட்டடத்தில் டோணியின் பிரம்மாண்ட போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.



நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளராக ஹிந்துஜா குழுமத்தின் கீழ் செயல்படும் அசோக் லேலன்ட் திகழ்கிறது.இந்த நிறுவனத்தின் 60 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை விளம்பர தூதராக யாரும் நியமிக்கப்பட்டதில்லை. 

இந்த நிலையில், முதன்முறையாக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் முதல் விளம்பர தூதராகியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மஹேந்திர சிங் டோணி. மேலும், சென்னையிலுள்ள அசோக் லேலண்ட்டின் 10 மாடிகள் கொண்ட அலுவலக கட்டடத்தில் அசோக் லேலண்ட் சீருடையுடன் டோணி வணக்கம் தெரிவிப்பது போன்ற பிரம்மாண்ட போஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கிறது.

டோணி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டது குறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாசரி கூறுகையில்," எங்களது நிறுவனத்தின் மதிப்புக்கு ஏற்ற தூதராக டோணிதான் மனதில் பட்டார். வேறு ஒருவரையும் நாங்கள் நினைக்கக்கூட இல்லை. டோணி மூலம் எங்களது தயாரிப்புகளை முன்னிலைப்படுத்த முடியும் என்று நம்புகிறோம்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக