ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உடைத்து நொறுக்கப்பட்டது பள்ளிவாசல்:இலங்கை அநுராதபுரத்தில் பேரினவாதிகளின் வெறிச் செயல்

அநுராதபுரத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் இடித்துத் தகர்த்துள்ளனர். துட்டகைமுனு மன்னனின் சமாதி அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் அமைந்திருந்த காரணத்தினாலேயே பௌத்த பேரினவாதிகள் கடும் கோபத்துடன் பிரஸ்தாப பள்ளிவாசலை இடித்துத் தகர்த்துள்ளனர்.
சிங்கள ராவய தேசிய இயக்கம், பௌத்த பாதுகாப்புப் பேரவை, தம்மவிஜய மன்றம் ஆகியவற்றின் உறுப்பினர்களான கடும்போக்கு இனவாதிகள் பௌத்த பிக்குகள் தலைமையில் ஒன்று திரண்டு பள்ளிவாசலை இடித்தழித்துள்ளனர்.

பள்ளிவாசல் இடிக்கப்படும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிசார் இனவாதிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதுடன், கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியின் பின் தற்போது நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள சிறுபான்மை மக்களின் வணக்கஸ்த்தலங்கள் பேரினவாதிகளின் கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள அதே நேரம், அரசாங்கமும் இவ்விடயத்தில் பராமுகமாக இருக்கின்றதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக