ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பின்லேடனின் மனைவி, குழந்தைகள்! வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட வீடியோ வெளியானதால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)


அமெரிக்கக் கடற்படையின் விசேட பிரிவான சீல் படைப்பிரிவால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு வெளிவரும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இது காணப்படுகின்றது.
ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோபதாத் நகரில் கொல்லப்பட்ட பிறகு அவரது மனைவிகள், குழந்தைகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் கண்காணாத இடத்தில் பாகிஸ்தானின் புலனாய்வுப் பிரிவினரால் சிறை வைக்கப்பட்டனர்.

ஆனால் அவர்கள் பாகிஸ்தானில் உள்ள பிரத்தியேக இடம் ஒன்றில் வீட்டுக் காவலில் நல்ல நிலையில் சிறையில் வைக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமபாத்தில் உள்ள பிரத்தியேக வீடு ஒன்றில் ஒசாமா மனைவி, குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சிறை வைக்கப்பட்டுள்ள பரபரப்புக் காட்சியை Al Arabiya television network என்ற தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
குறித்த வீடியோக் காட்சியில் காட்டப்படுகின்ற முக்கிய விடயங்கள் வருமாறு,
அந்த வீடியோவில் காட்டப்படுகின்ற வீட்டில் குழந்தைகள் கரடிப் பொம்மை மற்றும் கிரிக்கட் மட்டை ஆகியவற்றுடன் விளையாடுகின்றன. கைது செய்யப்பட்ட ஒசாமா பின்லேடனின் மூன்று மனைவிகளும் குரான் வாசித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
அவர்கள் இருக்கின்ற வீட்டுப் பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.
கடுமையான ஆயுதங்களுடன் பாகிஸ்தானின் விசேட இராணுவத்தினரும் பொலிஸாரும் வீட்டின் முன் காணப்படுகின்றார்கள்.
கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் அபோபதாவத் வீட்டில் வைத்து பாகிஸ்தான் பொலிஸாரால் ஒசாமாவின் மூன்று மனைவிகளும் 2 குட்டி மகள்களும் கைது செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக