ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வீட்டு வாசலில் ரேஷன் பொருள் வினியோகம் – அரசு பரிசீலனை


வீட்டு வாசலில் ரேஷன் பொருள் வினியோகம் – அரசு பரிசீலனைதமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்களை வீடு வீடாக வினியோகம் செய்திட முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

.
தமிழகத்தில் தற்போதைய மக்கள் தொகை 7 கோடியே 80 லட்சம். இதில் சுமார் 1கோடியே 10 லட்சம் பேர் ரேஷன் கார்டுகள் வைத்துள்ளனர். ரேஷன் கார்டுகள் வைத்துள்ளவர்களுக்கு 32 மாவட்டங்களில் உள்ள 36 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும்போது ஸ்டாக் இல்லை, எடை குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்சினைக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரிகளிடம் புதிய தி்ட்டம் தீட்டுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. அத்தியாவசியப் பொருள்களை பாக்கெட்டுகளாக வாகனங்களில் ஏற்றிச் சென்று  வீடுவீடாக விநியோகம் செய்யும் திட்டம் குறித்து அவர்கள் யோசனை கூறியதாகவும் விரைவில் இதை அறிமுகப்படுத்தப்படுத்த அரசு  திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக