ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

புலம்புகிறார் சச்சின் நாக்கு செத்து போச்சு


புனே : இங்கிலாந்தில் வடா பாவ், கார சட்னி இல்லாமல் நாக்கு செத்து விட்டதாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பையில் வடா பாவ் பிரபலமான ஸ்நாக்ஸ். பிரட்டுக்கு நடுவில் வடையை வைத்து பச்சைமிளகாய், இஞ்சி, உருளைக்கிழங்குடன் இன்னும் சில மசாலா ஐயிட்டங்களை சேர்த்து சூடாக்கி காரசாராக தருவார்கள். இந்த வடா பாவ் என்றால்  சச்சினுக்கு மிகவும் பிரியமாம்.


இது குறித்து, இங்கிலாந்தில் மாராட்டி டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ÔÔநானும் எனது மகன் அர்ஜூனும் மும்பையில் வடா பாவை அடிக்கடி சாப்பிடுவோம். வடா பாவை அடித்துக் கொள்ள வேறு எந்த ஸ்நாக்சும் கிடையாது. சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் காரமாக  சுவையே தனியாக இருக்கும். இங்கிலாந்தில் இதெல்லாம் கிடைக்காமல், நாக்கு செத்து போச்சு. எப்போது வடா பாவை சாப்பிடுவோமோ என்ற ஆவலுடன் இருக்கிறேன்ÕÕ என்றார்.

சச்சினின் பால்ய நண்பர் வினய் யடேகர் கூறுகையில், Ôசச்சினின் வீக்&பாயிண்ட் வடா பாவ் தான். வடா பாவ் இருந்தால் வேறு எதையும் சாப்பிட மாட்டார். அவர் 28வது சதம் அடித்த போது, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு விருந்து கொடுத்தோம். அப்போது, சச்சினின் நெருங்கி நண்பரான வினோத் காம்ப்ளி 28 வடா பாவை பரிசாக கொடுத்தார்ÕÕ என்றார். சச்சினின் நிஜமான Ôசீக்ரெட் ஆப் எனர்ஜிÕ வடா பாவ்தானோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக