ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சச்சினுக்கு பாரத ரத்னா விருது!


புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மகென் தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள், வீரர்கள் மற்றும் உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள் சச்சினுக்கு சிவிலியன் விருதை தர ஆதரவாக தங்களது கருத்துக்களை ஏற்கனவே வெளிபடுத்தியிருந்தனர். பாரதரத்னா விருது தற்போது கலை, இலக்கியம், அறிவியல் சாதனைகள் மற்றும் பொதுசேவையில் அங்கீகாரம் பெற்றவர்களுக்கே வழங்கபடுவது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக