ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சூளைமேடு சூட்டுச் சம்பவம்.. இலங்கை அமைச்சர் டக்ளஸை கைது செய்யாதது ஏன்? நீதிமன்றம்


சென்னை சூளைமேட்டில் கடந்த 1986ம் ஆண்டு ஈழப் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திருநாவுக்கரசர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அப்போது ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இருந்த தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது
.
இது தொடர்பான வழக்கு விசாரணை 4வது மேலதிக பிரிவு நீதிமன்றில் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்ற அமைச்சர் டக்ளஸ் சிங்களர்களுக்கு ஆதரவாளராக மாறினார். அதன் பயனாக இலங்கை ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே கொலை வழக்கு விசாரணைக்கு அமைச்சர் டக்ளஸ் சமூகமளிக்காததால் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு அவர் டெல்லிக்கு அரசு விருந்தினராக வந்தபோது அவரை கைது செய்யக்கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இதனால் பயந்துபோன அமைச்சர் டக்ளஸ் தனக்கு எதிரான பிடியாணை உத்தரவையும், தேடப்படும் குற்றவாளி என்ற உத்தரவையும் ரத்து செய்யக் கோரி மனு செய்தார். தனக்கு முன்பிணை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நடந்தது. அப்போது அமைச்சர் டக்ளஸுக்கு பிணை கொடுக்க அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர் டக்ளஸுக்கு பிணை வழங்க இயலாது என்று நீதிபதி உத்தரவிட்டார். அமைச்சர் டக்ளஸ் உயர் நீதிமன்றில் சரண் அடைந்து தன் மீதான உத்தரவுகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறினார்.
ஆனால் இதுவரை அவர் சரண் அடையவில்லை . இந்த நிலையில், அமைச்சர் டக்ளஸுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டெல்லிக்கு வந்தபோது டக்ளஸ் தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை.
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக