ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

28 வயதில் புரட்சியால் பிடித்த ஆட்சியை 69 வயதில் இழந்தார்




லிபிய ராணுவத்தில் வீரராக இருந்த கடாபி, 1965ல் பெங்காசி ராணுவ பல்கலைக்கழக அகாடமிக்கு வந்தார். அங்கிருந்து 1966ல் பிரிட்டன் ராயல் மிலிடரி பயிற்சிக்கு சென்றார். மீண்டும் படைக்கு திரும்பிய அவர், தனது ஆதரவாளர்களை திரட்டினார். துருக்கியில் சிகிச்சைக்கு லிபிய மன்னர் இட்ரிஸ் போயிருந்தபோது புரட்சி மூலம் 1969ல் ஆட்சியை கவிழ்த்தார் கடாபி.


லிபிய அரபு குடியரசு என்று அறிவித்தார். முப்படை தளபதியாகவும், ஆளும் கவுன்சில் தலைவராகவும் ஆனார். 1970 &72 பிரதமராகவும், ராணுவ அமைச்சராகவும் இருந்தார். 1979ல் ஆட்சியாளரானார். 1911 &1951 வரை இத்தாலியை ஆட்சி செய்த லிபியாவின் மன்னராட்சி முறையை ஒழிப்பதாக கூறியவர், தொடர்ந்து அதிபராக தானே நீடித்தார். ஏழைகளுக்கு அடிப்படை வாழ்க்கை வசதிகளை அளிப்பதாக கூறிய அவரது குடும்பம் கடந்த 42 ஆண்டுகளில் ஏராளமான சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பிப்ரவரியில் புரட்சி படை தோன்றி கிளர்ச்சி தொடங்கியது. அதனால் 28 வயதில் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்த கடாபி அதே புரட்சிக்கு 69 வயதில் ஆட்சியை ஞாயிறன்று இழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக