ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவின் அருமையான கண்டுபிடிப்பு...வந்தாச்சு !



நம்ம இந்தியாவும் பிரான்சும் (பிரான்ஸ் தான் நினைக்கிறன்) சேர்த்து ஒரு அருமையான சரக்கு கண்டுபிடித்து உள்ளனர்.இதை கண்டுபிடித்து ஒரு மாதம் ஆக போகிறது. என்று விற்பனைக்குவரும்  என்று தான் தெரியவில்லை.இது மட்டும் வெளிவந்தால் நம்ம ஊர் குடிமகன்களுக்கு ஒரே சந்தோஷம்தான்.

இந்த சரக்கின் சிறப்பு:-

இந்த சரக்கில் கசப்பு தன்மை மற்றும் வாசனை வராது.எவ்வளவு குடித்தாலும் வாடை வரவே வராது.

இதன் நன்மை:-
  • சரக்கு அடிக்கும் போது ஊறுகாய் தேவை இல்லை
  • சைடிஷ் வாங்க பணம் செலவு செய்ய தேவை இல்லை
  • தமிழ்நாட்டில் WINESHOP நல்லா கல்லா கட்டும்
  • COLLAGE மற்றும் ஆபீஸ் போகும்போது குடித்து விட்டு போனாலும் வாடை வராது அதனால் பிரச்சினை இல்லை
  • இந்தியா தான் உலகின் NO1 குடிமகன் வாழும் நாடு என பெயர் வாங்கும் 
  • நான் கல்லூரி படிக்கும் போது பசங்க எல்லோரும் சரக்கு அடிக்க ரொம்ப கஷ்ட படுவார்கள் இனி வரும் தலைமுறை அந்த கஷ்டம்மே தேவை இல்லை.
  • சாலை விபத்து (டிராபிக் போலீஸ் குடித்துவிட்டு நிற்பார்) நடக்கவே நடக்காது,
நாட்டுக்கு தேவையானதை கண்டுபிடிக்க சொன்னால் தமிழ்நாட்டை தூங்க வைப்பாணுக போல.இப்போ தான் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் முதல் உலக மது ஒழிப்பு தினம் நடைபெற்றது அதற்குள் நம்ம ஆளுங்க ஒரு அருமையான கண்டுபிடிப்பை கண்டுபிடித்து உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக