ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

குமரிகளின் குத்தாட்டத்தால் சூடு பிடித்த யாழ் உள்ளூராட்சிசபை தேர்தல் பிரசாரம்! (காணொளி இணைப்பு


 
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் தரப்பு சார்பில் பெருமெடுப்பில் யாழ் குடாநாட்டில் பிரச்சாரங்கள் இடம்பெற்றது. குறிப்பாக அமைச்சர்களின் படையெடுப்பு, ஜனாதிபதியின் பிரசன்னம் போன்ற நடவடிக்கையினால் யாழ் குடாநாட்டு தேர்தல் களம் என்றும் இல்லாதாவாறு களைகட்டி இருந்தது என்று கூறலாம்.


குறிப்பாக எவ்வாறாவது உள்ளூராட்சி சபைகளினை கைப்பற்றி விடவேண்டும் என்னும் நோக்கில் ஆளும் தரப்பு வெவ்வேறு வகையான பிரச்சார உத்திகளினை கையாண்டு இருந்தது.



குறிப்பாக யாழ் நகரின் முன்னணி நகரங்களில் இசை வாகன நிகழ்சிகளினை நடத்தி கவர்ச்சி கன்னிகளைக் கொண்டு வந்து வீதிகளில் குத்தாட்ட நடனம் போட வைப்பதன் மூலம் வாக்கு வேட்டையினை மேற்கொண்டது அரசு.

இவ்வாறான கேளிக்கை பிரச்சாரம் முக்கிய போக்குவரத்து வீதிகள் மூடப்பட்டு நகரின் முக்கியமான சந்திகளில் இடம்பெற்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு மட்டும் அல்லாமல் வீதியால் சென்ற மக்கள் பல அசௌகரியங்களுக்கும் ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

யாழில் புது உதயம் என்ற பெயரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியிலே இவ் இசை நிகழ்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக