ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

யாழ் பொது இடங்களில் தம்மடித்து மாலை மாற்றி உல்லாசமாயிருந்த இந்திய MPக்கள் குழுவினர்

thamயாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய குழுவில் அங்கம் வகிக்கும் சிலர் மக்களின் குறைகளை கேட்காது, ஏதோ சுற்றலா வந்துள்ளது போல் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளனர். ​
இன்று (10) காலை யாழ். மகேந்திரபுரம் கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பாராளுமன்ற குழவினர் இந்திய வீட்டு திட்டத்தின் கீழ் அமைத்து கொடுக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். ​ ​

இதன்போத அக்குழுவில் சென்ற சிலர் அலட்சியமாக செயற்பட்டுள்ளனர். ​
இவர்கள் தங்களுக்குள் தாங்களே படமெடுத்தும், தமக்கு மக்கள் அணிவித்த மாலையை தங்களுக்குள் மாறி மாறி அணிவித்து படமெடுத்தும் கொண்டனர். ​
அதேவேளை அக்குழுவில் அங்கம் வகித்த ஒருவர் புகை பிடித்தவாறே வீடுகளை சுற்றி பார்த்தார். ​
இலங்கையில் பொது இடங்களில் புகைப்பிடித்தல் தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. ​
இவர்களின் இந்த செயற்பாட்டினை கண்டு அங்கிருந்த மக்கள் அதிருப்தியும் கவலையும் வெளியிட்டனர். ​
tham2tham3tham5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக