ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மன்மோகன் நல்லவர்; சோனியாதான் பிரச்சனை - அன்னா ஹசாரே


மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த காந்திய வாதியான அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று பெங்களூரில் ஊழலுக்கு எதிரான அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் ஹசாரே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் மன்மோகன்சிங் நல்ல மனிதர். ஆனால் சோனியாகாந்தி ரிமோட் கன்ட்ரோல் போல் இருந்து கொண்டு அவரை இயக்கி வருகிறார். சோனியாகாந்தி தான் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார். பிரதமர் மன்மோகன்சிங் கெட்ட மனிதர் அல்ல. ஆனால் பிரச்சினைகளை உருவாவதற்கு ரிமோட் கன்ட்ரோல் தான் காரணம்.

எந்த அரசாக இருந்தாலும் மக்கள் சக்தி தான் பலம் வாய்ந்தது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. ஊழல்வாதிகளை விசாரிக்கும் லோக்பால் சட்ட மசோதாவை வருகிற ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

இல்லையெனில் புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன். இதற்கான கர்நாடக மக்கள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 

ஊழலுக்கு எதிராக நான் பிரசாரம் செய்து வருவதால் இதுவரை 6 மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த 6 பேரும் என்னை பழிவாங்க துடிக்கிறார்கள். ஆனால் கறைபடியாதவன் என்பதால் அவர்களால் என்னை நெருங்க முடியவில்லை.

இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக