ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த 10 இலங்கை மீனவர்கள் கைது


:இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த 10 இலங்கை மீனவர்களை கிழக்கு கடலோர காவல்படை கைதுசெய்தது. அவர்களிடம் இருந்து 2 படகுகளும் கைப்பற்றப்பட்டன.

காகிநாடாவுக்கு 120 கிலோமீட்டர் தொலைவில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடலோர காவல்படை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
2 படகுகளிலும் 5 ஆயிரம் கிலோ மீன்கள் இருந்தன. அந்த படகுகள் போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக காகிநாடா துறைமுகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன.
2011-ல் இலங்கை மீனவர்கள் இவ்வாறு இந்திய கடல் எல்லைக்குள் வந்து பிடிபடுவது இது 8-வது முறையாகும்.
இதுவரை 17 படகுகள் 84 நபர்கள் மற்றும் 18 ஆயிரத்து 900 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக