ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழர்களை சந்திக்க ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுக்கும்?



 இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழர்களை நேரில் சந்தித்து உரையாட தங்கள் நாட்டுக்கு வருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்க இலங்கை அரசு முடிவுசெய்துள்ளதாக அந்த நாட்டின் தமிழ் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் யுத்தம் நிலவிய பிரதேசங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சந்தர்ப்பம் அளிக்க இலங்கை அரசு உத்தேசித்துள்ளது.

அதன் மூலம் இலங்கை அரசு தொடர்பான ஜெயலலிதாவின் எதிர்ப்புணர்வுகள் குறையும் என அந்த நாடு எதிர்பார்க்கிறது.

மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திரும்ப இலங்கைக்கு வரவழைப்பதற்கும் தமிழக அரசின் ஒப்புதலைப் பெறவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக