ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மும்பை கோர விபத்து. இரண்டு பஸ்களுக்கிடையில் உட்கர்ந்திருந்தவர்கள் 27 பேர் நசுங்கி உயிரிழந்தனர். (படங்கள்)

மும்பை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த சாலை விபத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரு ம்பிய 27 பேர் பரிதாபமாக பலியா கினர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே யைச் சேர்ந்த சிலர், மும்பை புறநகர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்பேற்று விட்டு இரண்டு மினி பஸ்களில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மும்பை- புனே விரைவுச்சாலையில் காலாபூர் அருகே வந்தபோது ஒரு பஸ்ஸின் டயர் பழுமடைந்தது இதனால், சாலையோரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, டயரை பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.
மற்றொரு பஸ் பழுதடைந்த பஸ்சிற்கு பின்புறம் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ்களில் வந்தவர்கள், அவற்றில் இருந்து இறங்கி இரண்டு பஸ்களுக்கும் இடையில் தரையில் அமர்ந்திருந் தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு முச்சக்கரவண்டி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பழு தடைந்திருந்த பஸ்சின் மீது வேக மாக மோதியது. இதையடுத்து அந்த பஸ் நகர்ந்து, பின்புறமாக நின்று கொண்டிருந்த மற்றொரு பஸ் மீது மோதியது. இதில், பஸ்களுக்கு இடையில் அமர்ந்திருந்த 27 பேர், உடல் நசுங்கி இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக