உணவே மருந்து என்பது ஆன்றோர் வாக்கு மண்ணில் விளையும் காய்கறிகள் மகத்தான சத்துக்களை கொண்டுள்ளது. பூமிக்கடியில் புதையலாய் பொதிந்து கிடக்கும் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் பற்றிய தகவல்கள்:
வேரில் சத்துக்களை சேமிக்கும் கிழங்குவகை காய்கறிகள் மாவுச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளன. இவை உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும், மாவுப்பொருளின் அளவையும் சம நிலையில் வைப்பதில் உதவி புரிகின்றன. தினமும் உட்கொள்ளும் காய்கறிகளில் உள்ள சத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
உருளைக்கிழங்கு: உலகின் பெரும்பாலான மக்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் உருளைக்கிழங்கில் அரிசியில் உள்ளதை விட அதிகமான சத்துக்கள் உள்ளன. இதில் மாவுச்சத்தும் உயிர் சத்துக்களும் உள்ளன. இரும்பு மற்றும் புரதச்சத்தும் இந்த கிழங்கில் காணப்படுகின்றன.
பீட்ரூட்: இனிப்புதன்மை அதிகம் கொண்ட இந்த காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதிக அளவு குளுக்கோஸ் சத்து நிறைந்தது. ரத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு.
கருணைக்கிழங்கு: காரும் கருணை காரா கருணை என இரு வகை உண்டு. பிடிகிழங்கு காரும் தன்மையுடையது. காராக்கருணை சேனைக்கிழங்கு வகையைச்சார்ந்தது. இதில் வைட்டமின் சத்துக்களும், மாவு மற்றும் புரதச்சத்துக்களும் உள்ளன.
சேப்பைக்கிழங்கு: நான்கு வகை சேப்பைக்கிழங்குகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ.பி. என்ற உயிர்சத்தும் இரும்பு மற்றும் புரதச்சத்தும் உள்ளன.
மரவள்ளிக்கிழங்கு: இனிப்புச்சுவை நிறைந்த இந்த கிழங்கு உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. புரதம், கால்சியம் சத்துக்கள் இதில் உள்ளன.
பனங்கிழங்கு: சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த இந்த கிழங்கில் புரதச்சத்தும், சில உயிர்சத்துக்களும் உள்ளன. மலச்சிக்கலைப்போக்கும், பசியை அதிகரிக்கும்.
வாழைக்கிழங்கு: வாழைத்தண்டுக்குள்ள மருத்துகுணம் இதற்கு உண்டு சிறுநீரகம் தொடர்பான தொல்லைகள் நீங்கும். சிறுநீரிலும், வயிற்றிலும் தங்கியுள்ள கற்களை கரைத்துவிடும் ஆற்றல் இந்த கிழங்கிற்கு உண்டு.
மரவள்ளிக்கிழங்கு
தேவையான பொருட்கள்;
மரவள்ளிக்கிழங்கு - அரைக் கிலோ
தேங்காய்த்துருவல் -3டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - 1பெரியது
எண்ணெய் -2டேபிள்ஸ்பூன்
கடுகு -அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
கருவேப்பிலை - 2இணுக்கு
உப்பு - தேவைக்கு.







கருவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

துருவி ரெடி செய்த கிழங்கை சேர்த்து பிரட்டவும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக