ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

....சபாஷ் சரியான போட்டி

தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கு போட்டியாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், பல இலவசங்களை வழங்குவது தொடர்பான அறிவிப்புகள் இடம் பெற உள்ளன. இது தொடர்பாக அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

* வீடுதோறும் கிரைண்டரும், மிக்சியும் சேர்த்து தரப்படும்.
* ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலி இலவசம்.
* விதவைப் பெண்கள் அனைவருக்கும், இலவச தையல் மிஷின் வழங்கப்படும்.
* அனைத்து குடும்பங்களுக்கும் இலவச மொபைல் போன் வழங்கப்படும்.
* ஆறாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்.
* கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள்.
* அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை.
* அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக அரசின் சார்பில் கேபிள், "டிவி' இணைப்பு வழங்கப்படும்.
* குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும், 30 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
* குடும்ப அடடைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ஒரு லிட்டர் இலவச மண்ணெண்ணெய்.
* அனைத்து சமுதாய மாணவ, மாணவியருக்கும் இலவச கல்வி உதவித்தொகை.
* மாணவ, மாணவியருக்கு தகுதி அடிப்படையில் இலவச, "லேப்-டாப்' வழங்கப்படும்.
* மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* அரசு மருத்துவ காப்பீட்டுத் தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க., வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில், அதிகாரப்பூர்வமாக இவையெல்லாம் இடம்பெற உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக