ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈரானில் பேஸ்புக்குக்கு ஆரம்பிக்கும் தலைகீழ் நிலைமை!



ஈரானில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பேஸ்புக் மீது தடை ஏற்படுத்தப்பட்டது.
தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அங்கு ஏற்பட்ட அமைதியின்மைக்கு பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற இணையத்தளங்கள் பங்களிப்புச் செய்ததாக குற்றஞ்சாட்டியே ஈரான் பேஸ்புக் மீது தடை விதித்தது.

ஈரானிய சமூக ஆர்வலர்கள் பேஸ்புக்கினைப் பயன்படுத்தியே ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குசெய்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
பேஸ்புக் சமூகவலையமைப்பின் மீதான தடையைத் தளர்த்தும் நடவடிக்கையை ஈரான் சிறிது சிறிதாக ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இணையக்குற்றங்களைத் தடுத்தல், பாலியல் சம்பந்தமான விடயங்களைத் தவிர்த்தல் போன்ற காரணங்களுக்காக பேஸ்புக்கின் உதவியை நாடும் பொருட்டே அதன் மீதான தடை தளர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக அந்நாட்டு பொலிஸார் பேஸ்புக்குடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஈரானியர்களால் பேஸ்புக்கில் உருவாக்கப்பட்டுள்ள பாலியல் மற்றும் விபச்சாரம் தொடர்பான பக்கங்களை அகற்றும் நடவடிக்கையையும் ஈரான் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக