ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் 6 மாதங்களில் ரயில் விபத்துகளில் 175 பேர் பலி


 In 6 Months 175 Dead Chennai Train Accidents
சென்னை: சென்னை மற்றும் புறநகரில் தண்டவாளத்தைக் கடந்து நாள்தோறும் 2 பேர் வீதம் 6 மாத காலத்தில் 175 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்களை கேட்டு உறவினர்கள் யாரும் வராததால் அப்படியே சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

சென்ட்ரல் பகுதியில் 22 ஆண்களும், 2 பெண்களும், எழும்பூரில் 52 ஆண்களும், 8 பெண்களும், கொருக்குப்பேட்டையில் 18 ஆண்களும், 1 பெண்ணும் பலியாகி உள்ளனர். இதுதவிர ஆவடியில் 15 ஆண், 2 பெண், பெரம்பூரில் 19 ஆண், செங்கல்பட்டில் 18 ஆண், 1 பெண், தாம்பரத்தில் 18 ஆண், 1 பெண் ரெயிலில் அடிபட்டு பலியாகி உள்ளனர்.
பலியானவர்களின் முகவரி கிடைக்காதநிலையில்தான் உறவினர்களை கண்டுபிடித்து உடல்களை ஒப்படைக்க முடியவில்லை என்கின்றனர் ரயில்வே போலீசார். இதனால் அடையாளம் காணப்படாத உடல்களின் போட்டோ நகல்களை ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் அனுப்பி வைத்து வருகின்றனர். அப்படியாவது சவக்கிடங்கில் இருக்கும் சடலங்களை எடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக