ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கட்டடம் இடிந்து விழும் அதிர்ச்சி வீடியோ!


Bessoba பகுதியில் காணப்பட்ட பிரமாண்டமான 5 அடுக்கு மாடிக் குடியிருப்பு, அவசர நிலைமைகள் திணைக்களத்தின் உத்தரவின் பெயரில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (6) காலை 10.55 மணியளவில் விசேட நிபுணர்களின் உதவியுடன் அடுத்துள்ள கட்டடங்களுக்கு சேதம் ஏற்படாத வண்ணம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இவ் அடுக்கு மாடி குடியிருப்பில் 120 குடும்பங்கள் வசித்துவந்த நிலையில், ஏப்ரல் 1 இல் கட்டடத்தின் கீழ் பகுதி ஒன்றில் ஏற்பட்ட சிறிய வெடிப்பு, ஏப்ரல் 5 இற்கிடையில் 720 mm அளவுக்கு விஸ்தீரணம் அடைந்தது.
இதன் காரணமாக பாதுகாப்பு கருதி கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
அக் கட்டடத்தில் குடியிருந்தவர்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந் நகர நிர்வாகம் இழப்பீடாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக