ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

காஷ்மீரில் ராணுவ குற்றங்கள் நடப்பதாக பரபரப்பு காட்சிகள்: சானல்-4 டி.வி. ஒளிபரப்பிய அதிர்ச்சி வீடியோ இணைப்பு.

 லண்டனில் இருந்து சானல்-4 எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அந்த டி.வி. ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போர் குற்றங்களை ஆவணப்படமாக ஒளிபரப்பியது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரவும் வழிவகுத்தது.
இந்த நிலையில் சானல்-4 டிவியில் காஷ்மீரில் நடந்த போர் குற்றக் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. சுமார் 1 மணி நேரம் ஒளிபரப்பான அந்த ஆவணப் படத்துக்கு காஷ்மீர் டார்ச்சர் டிரெயில் என்று பெயரிடப்பட்டிருந்தது.

அந்த ஆவணப் படத்தில் காஷ்மீரில் நடந்த ராணுவ குற்றங்கள் அலசப்பட்டிருந்தன. இந்திய ராணுவ அத்து மீறல் காட்சிகள் டி.வி.யில் வெளியாகி இருப்பதால் ராணுவ உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சானல்-4 தொலைக்காட்சி தவிர இங்கிலாந்தில் உள்ள சில பத்திரிகைகளும் பிரதமர் மன்மோகன்சிங் அரசை விமர்சனம் செய்து வருகின்றன.
இதனால் இங்கிலாந்து அரசுடன் கெஞ்ச வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஐ.நா.சபையில் அடுத்த தடவை நடக்கும் மனித உரிமை மாநாட்டின் போது இந்த விவகாரத்தை கையில் எடுக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

1 கருத்து:

  1. அஹிம்சாவாதிகளின் அட்டூழியங்களை நாம் இரண்டு தடவை அனுபவித்தவர்கள். நிச்சயமாய் இவர்கள் தண்டனை பெறவேண்டியவர்களே. சணல் 4க்கு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் செய்த கொலைகளை மறைப்பதற்காக இந்தக் கொலைகளை வெளிக் கொண்டு வர எண்ணும் சிங்கள சாத்தன்களின் செயல் கேலிக்குரியது. சாத்தன் வேதம் ஓதுவது போல் உள்ளது. இரண்டு கொலைவெறியரும் தண்டனைக்கு உற்பட வேண்டியவரே.

    பதிலளிநீக்கு