ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து : 15 பேர் பலி?

அரக்கோணம் அருகே, சிக்னலுக்காக நின்றுக் கொண்டிருந்த ரயில் மீது, மற்றொரு ரயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், பலர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
அரக்கோணத்திலிருந்து, நேற்று இரவு, காட்பாடி சென்ற பயணிகள் ரயில், சித்தேரி அருகே, சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது, சென்னை, கடற்கரையிலிருந்து வேலூர் சென்ற புறநகர் மின்சார விரைவு ரயில், நின்று கொண்டிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், ஐந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. மூன்று பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இதில், நின்று கொண்டிருந்த ரயிலின் கார்டும், மோதிய ரயிலின் டிரைவர் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்திற்கு, சென்னையிலிருந்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ரயில் விபத்தால், சென்னை சென்ட்ரலிலிருந்து இரவு 9 மணிக்கு மேல் புறப்படும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
மீட்புப்பணிகள் பாதிப்பு: அரக்கோணம் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்ததால், மீட்புப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விபத்து குறித்த விவரங்களுக்கு அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 044 25347771, 25357398 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம், என, தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக