ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தூங்குகிறார் விஜயகாந்த்! - அன்புமணி தாக்கு

Anbumani Ramadass
சென்னை: மக்கள் பிரச்சனைகளுக்காக போராடாமல் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தூங்கிக் கொண்டிருக்கிறார், என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "சமச்சீர் கல்வி, சட்டப்பேரவை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிமுக அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.

இப்பிரச்சனையில் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் செயல்படவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவராக வந்துவிட்டார். எந்த ஒரு கருத்தும் சொல்லமுடியாமல், போராட்டமும் நடத்தாமல் அந்த கட்சி தூங்கிக்கொண்டிருக்கிறது. எவ்வளவோ மக்கள் பிரச்சனைகள் இருக்கிறது. அறிக்கை விட்டாரா, போராடினாரா. அவரைப் பற்றி மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். தகுதியில்லாத நபர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்குவது எத்தனை பெரிய தவறு," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக