ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

காங். - திமுக உறவு மேலும் வலுப்படும் : பிரணாப் முகர்ஜி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperசென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று காலை சந்தித்து பேசினார். பின்னர் பிரணாப் கூறுகையில், ‘காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடரும்.
இரு கட்சிகளிடையேயான உறவு மேலும் வலுப்படும்’ என்றார். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்றிரவு சென்னை வந்தார். ராஜ்பவனில் இரவு தங்கினார். இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு வந்த பிரணாப் முகர்ஜியை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பொன்முடி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் கருணாநிதியை பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது.

சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் மூத்த தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவது வழக்கம். அரசியல் சூழ்நிலை பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவோம். அதன்படி இன்று தமிழகம் வந்துள்ளேன். தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக வந்திருக்கிறேன். எனவே, கருணாநிதியை சந்தித்து பேசினேன்.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி இருவரும் பேசினோம். காங்கிரஸ் - திமுக உறவு தொடருமா, தொடராதா என்று பல யூகங்கள் வெளியிடப்படுகின்றன. அவர்களுக்கு ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்ந்து இருக்கிறது. இந்த உறவு மேலும் வலுப்படுத்தப்படும். கூட்டணி தொடரும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக