ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நெடுமாறன் பெயரைச் சொல்லி பண கொள்ளை?

முள்ளிவாய்க்கால் நினைவாக சோழன் ஆண்ட தஞ்சையில் ஈகிகள் முற்றம் என்ற நினைவகத்தை ஐயா நெடுமாறன் அவர்களின் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவி வருகிறது.
கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நுற்பமான சிற்பக்கலையோடு இந்த ஈகிகள் முற்றம் நிறுவப்பட்டு வரும் நிலையில், அதற்காக பணம் சேர்ப்பதாகக் கூறி ஒரு இணையம் பேப் பால்(paypal) மூலம் காசு சேர்த்துள்ளது.

ஆனால் அவ்வாறு தாம் காசைச் சேர்க்கச் சொல்லவில்லை என்றும், இவ்வாறு சேர்க்கப்பட்ட காசு தமக்கு கிடைக்கவில்லை என்றும் ஐயா நெடுமாறன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு உலகத் தமிழர் பேரமைப்பிடம் முன் அனுமதி பெறாமல், அவர்களுக்கே தெரியாமல் ஈகிகள் முற்றத்துக்கு காசுசேர்த்த மோசடிப் பேர்வழிகள் யார் என்று தேடினால் கிடைத்த விடை லங்கா சிறி குழுமமும் அதன் தமிழ் வின் என்ற செய்தி இணையமும் ஆகும்.

சுவிஸில் இருந்து திறக்கப்பட்ட ஒரு அனாமதேய பேப் பால் கணக்கு மூலம் மக்களிடம் பணம் பெறப்பட்டுள்ளது. இக் காசு எங்கு சென்றது என்று தெரியவில்லை ! இங்கே  நெடுமாறன் அவர்கள் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையை நாம் இணைத்துள்ளோம்.

காசு தமிழ் வின் இணையமூடாகப் பெறப்பட்டது என்பதற்குச் சான்றாக ஸ்கிரீன் ஷாட்டையும் இணைத்துளோம். ஐயா நெடுமாறன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை நாம் பிரசுரித்திருப்பதால் இனி இக் காசுக் எங்கே போனது என்ற கேள்விகள் எழு ஆரம்பிக்கும்.

உடனே நாம் அதனை இவரூடாக இவருக்கு கொடுத்தோம் என தமிழ் வின் இனிகு கூறும். இச் செய்தி பதிவேற்றும் வரை இவர்களால் சேகரிக்கப்பட்ட காசு எங்கே சென்றது என எவருக்கும் தெரியாது.

முள்ளிவாய்க்காலில் இறந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு நினைவு முற்றன் கட்டவேண்டும் என தள்ளாடும் வயதில் ஐயா நெடுமாறன் அவர்கள் நினைக்க, அதனைச் சாட்டி புலம்பெயர் தேசங்களில் எவ்வாறு மக்களிடம் பணத்தைக் கொள்ளையடிக்கலாம் எனச் சிலர் சுவிசில் ரூம் போட்டு யோசிக்கிறார்களே , இவர்களா தமிழர்கள் ? தேசியவாதிகள் போலச் செய்தி எழுதுவதும், பின்னர் மறைமுகமாக இலங்கை அரசையும் அதன் ஒட்டுக் குழுக்களையும் ஆதரிப்பதும், நடந்து வரும் அதே வேளை இது போன்ற ஈனத்தனமான பணத்தாசை பிடித்து அலையும் இணையங்களாக இவர்கள் மாறிவிட்டனர்.

எதை எதை வைத்து பணம் சம்பாதிப்பது என்பது போக, எதைவைத்து பணம் சம்பாதிக்கக்கூடாதோ அதனை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறது இதுபோன்ற இணையங்கள். இச் செய்தியை நாம் வெளியிட்டதான், இனி காசி ஆனந்தன் ஐயாவிடம் பணத்தைக் கொடுத்தோம் இல்லை, நெடுமாறன் ஐயாவோடு இருக்கும் வேறு சிலரிடம் நாம் பணத்தைக் கொடுத்தோம் என்று கூறி இவர்கள் தப்பிக்கவும் முனைவார்கள்.

எது எப்படி என்றாலும் ஒருவரின் அனுமதி இன்றி அவருக்காக எப்படி பணம் சேர்க்க முடியும் ? இது சட்டப்படி குற்றமும் ஆகும். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கும் சாத்தியக்கூறுகளும் இருக்கின்றது.

பழுத்து முதிர்ந்த அரசியல்வாதி என்பதால் அவர் தனது அறிக்கையில் எந்த இணையம் இந்த ஈனத் தனமான காரியத்தைச் செய்தது எனப் பெயர் குறிப்பிட்டு எழுதவில்லை. ஆனால் அதுகூடவா தெரியாமல் போய்விடும் ?

அறிக்கையும் ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளது:

நெடுமாறன் ஐயா விடுத்த அறிக்கை !





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக