ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

"மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்': தொல்.திருமாவளவன்


சென்னை, மே 13: சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பகல் 12 மணிக்கு திருமாவளவன் சந்தித்தார். மதியம் 2 மணி வரை சந்திப்பு நீடித்தது.இதன்பின்பு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியது: கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியின் சாதனைக்கு உரிய பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். அதற்கு ஏற்றாற்போல் கூட்டணியும் வலுவாக இருந்தது. ஆனால் எதிர்பார்க்காத முடிவுகள் வந்திருக்கின்றன.அரசியலில் வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியதுதான். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம். தேர்தலில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து பின்னர் ஆராய்வோம் என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக