ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐநா குற்றச்சாட்டுகள் போலியானவை: சரத் பொன்சேகா


சென்னை, மே 14- ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன், இலங்கை மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.கொழும்பில் உள்ள நவலோக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, இவ்வாறு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அரசு அனுமதி அளித்தால் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கத் தயாராக உள்ளேன் என்றும் பொன்சேகா கூறியதாக இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தனக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்குவதில் அரசு தயக்கம் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக