ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் ஆசைப்பட்டது நடந்துவிட்டது : நடிகர் விஜய் பரபரப்பு பேட்டி

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து நடிகர் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’நான் தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறிவந்தேன்.

ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக என் தந்தை அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார்.

வாக்குப்பதிவு அன்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்ததும், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன் என பேட்டி அளித்தேன்.

என் ஆசையும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதுதான். நான் ஆசைப்பட்டது நடந்துவிட்டது’’ என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக