ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிமுக அரசு வழங்கிய பேன், மிக்ஸிக்கு மாலை அணிவித்து, மணி அடித்து பெண்கள் ஒப்பாரி!

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து வினோத ஆர்ப்பாட்டம் (27.03.2012) நடைபெற்றது.








இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அரசு வழங்கிய பேன், கிரைண்டர், மிக்ஸிக்கு மாலை அணிவித்து, மணி அடித்து, சாம்பிராணி புகை போட்டு பெண்கள் ஒப்பாரி வைத்து நடு வீதியில் அழுதனர்.

மின்சாரம் இல்லையென்று தாரை தப்பட்டை அடித்து எலக்ரானிக் பொருட்களை பெண்கள் மார் அடித்து அழுது
கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்றனர். மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கவேண்டும் என கோசம் எழுப்பினர்.

போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கெஞ்ச, எங்களால் உங்களுக்கு பிரச்சனை வரக்கூடாது என்று சொன்னபடி போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றோம் என்று தெரிவித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராமச்சந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக