ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தனது இல்லை:இலங்கை அரசு



தமிழகத்தில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது இல்லை என்று இலங்கை அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்களின் மீது அடிக்கடி இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தொடர்த் தாக்குதலுக்கு இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.


இதுதொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தமானது இல்லை. மேலும் கச்சத்தீவு, இலங்கைக் கடல் எல்லைக்குள் இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவே ஒப்புக் கொண்டுள்ளார் என இலங்கை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத் தீவில் நடைபெறும் அந்தோனியர் தேவாலயத் திருவிழா மற்றும் இந்திய மீனவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை காய வைப்பதற்காக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர மீன் பிடிக்க அனுமதி கிடையாது என்று இலங்கை அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து கடந்த 1974 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக