ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈரான் ஆயுத கிடங்கில் பயங்கர வெடி விபத்து: கமாண்டர் உள்பட 17 பேர் பலி !

ஈரான் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் கமாண்டர் உள்பட 17 பேர் பரிதாபமாக பலியாயினர். ஈரான் தலைநகர் டெஹ்ரான் புறநகர் பகுதியில் உள்ளது மலார்ட் நகரம். இதன் அருகில் உள்ள பிட் கானேவில் ராணுவ ஆயுத கிடங்கு உள்ளது.
இங்கு அணு ஆயுதங்களும் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த கிடங்கில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. கிடங்கில் இருந்த ஆயுதங்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின.
அருகில் உள்ள குடியிருப்புகளில் ஜன்னல்கள், கதவுகள் நொறுங்கின. மக்கள் பீதி அடைந்தனர். இந்த விபத்தில் முதலில் 27 பேர் பலியானதாக செய்தி வெளியானது.

ஆனால், கமாண்டர் உள்பட 17 பேர் பலியானதாக ஈரான் ராணுவ மூத்த கமாண்டர் மோஜ்தபா கலேதி உறுதிப்படுத்தினார்.
மற்றொரு கமாண்டர் ரமேஜான் ஷெரீப் கூறுகையில், “ஆயுத கிடங்கில் தீவிரவாதிகள் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
இந்த விபத்தில் ஏராளமான ஆயுதங்கள் நாசமானதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக