ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உலக அளவில் 125 முறை வாய்தா வாங்கி சாதனை படைத்த ஒரே தலைவர் ஜெயலலிதாதான்-ஸ்டாலின்

 உலக அளவில் 125 முறை வாய்தா வாங்கிய புகழ் ஜெயலலிதாவை மட்டுமே சாரும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று தஞ்சாவூர் வந்தார் ஸ்டாலின். தஞ்சை அருகில் உள்ள சானூரப்பட்டியில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கலியமூர்த்தியின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கேட்டபோது, உலக அளவில் ஏறக்குறைய 125 முறை கோர்ட்டில் வாய்தா வாங்கிய புகழ் ஜெயலலிதாவைத் தான் சேரும் என்றார் ஸ்டாலின்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக