ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சிரியா கலவரத்தில் 120 வீரர்கள் பலி


டமாஸ்கஸ்: சிரியாவில் மக்கள் தொடங்கிய போராட்டம் பல மாதங்களாக நீடிக்கிறது. அதிபர் பஷர் அல்-அசாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஜிஸ்ர் அல்-சுகர் பகுதியில் கடந்த 3 நாட்களாக ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது
. அல் அப்யத் என்ற இடத்தில் உள்ள அரசு கிடங்கில் 5 டன் டைனமைட் வெடிபொருளை திருடி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். பல இடங்களில் ராணுவத்தினர் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் மொத்தம் 120 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக