ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம்!



இதுவரை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போகிறாரோ? என்று நினைத்து விடாதீர்கள் தலைப்பை பார்த்ததும். இந்த விஜய் இளைய தளபதி விஜய் இ‌ல்லை. இளைஞன் விஜய். அதாவது 80 வ‌யது இளைஞர் முதல்வர்
கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தின் உருவான இளைஞன் படத்தில் கதாநாயகனாக நடித்த பா.விஜய். தி.மு.க.வையும், அதன் தலைமை பீடத்தையும் நம்பி திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கி, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் பா.விஜய்.
தேர்தல் நெருங்குவதால், பிரசாரத்திற்கு பா.விஜய்யை பயன்படுத்திக் கொள்ளலாம் என உடன்பிறப்புக்கள் பலரும் யோசனை சொன்னதால், அதுபற்றி பரிசீலிக்க ஆரம்பித்திருக்கிறது தி.மு.க. தலைமை. ஆனால் கவிஞரோ... கழுவுற மீனில் நழுவுற மீன் போல நழுவுக்கொண்‌டே இருக்கிறாராம். எப்படி நழுவினாலும் கடைசியில் பிடிவாதம் தளரப்போவது மட்டும் நிச்சயம் என்‌கிறார்கள் விவரமறிந்தவர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக