ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வெளியிலிருந்து நீங்கள் பார்க்கும் இலங்கை நிஜமானதல்ல : சந்தியா எக்நெலிகொட


சந்தியா எக்நெலிகொட
ஊடகவியலார் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவியார் சந்தியா எக்னெலிகொட கலந்து கொண்ட விசேட கருத்தரங்கு ஒன்று சுவிற்சர்லாந்தின் பெர்ன் நகரில் நேற்று நடைபெற்றது.

 சர்வதேச காணாமல் போனோர் தினத்தை (ஆகஸ்டு 30) முன்னிட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளானோருக்கான அமைப்பு (Society for Threatened Peoples),  சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International) மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான சர்வதேச வலையமைப்பு (International network of Sri Lankan diaspora) அகியன இணைந்து இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன. அச்சுறுத்தலுக்கு உள்ளானோர் அமைப்பின் பிரதிநிதி Anna Leissing கருத்தரங்கை வழிநடத்தினார்.  சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதி Martin Naef, மனித உரிமைகள் பாதுகாப்பு துறை அமைச்சின் பிரதிநிதி Damiano Sguaitamatti ஆகியோரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு சுவிற்சர்லாந்து - இலங்கை இடையிலான அரசியல் தொடர்புகள், இலங்கை தொடர்பில் தற்போது சுவிற்சர்லாந்து கவனம் செலுத்து விடயங்கள் எவை என்பது பற்றி எடுத்துரைத்தனர்.  அதோடு பிரகீத் வரைந்த கேலிச் சித்திரைபடைப்புக்கள் கண்காட்சி ஒன்றும் நேற்று தொடக்கி வைக்கப்பட்டது.

முதலில் கருத்தரங்கை ஆரம்பித்து வைத்த Anna Leissing சந்தியா எக்நெலிகொடவை பேச அழைத்தார். சந்தியா பேசியதில் சில முக்கிய விடயங்கள் :
சொல்லுங்கள், எனது கணவரை தடுத்திருக்க வேண்டுமா? : சாந்தி எக்னெலிகொட

இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கேலிச்சித்திரங்கள் பிரகீத் காணாமல் போவதற்கு முன்னர் வரைந்தவை. அப்போதைய அவரது கனவு, இப்போது தான் அவற்றை அருங்காட்சியில் வைக்கும் முயற்சியாக நிறைவேறியுள்ளது. உலகில் மிக மோசமான குற்றம் எதுவென்று கேட்டால் நான், 'மனிதர்களை காணாமல் போக செய்வது' என்பேன்.

இலங்கையின் மிக மோசமாக பாதிக்கப்படும் மனித உரிமை மீறல், கருத்துச்சுதந்திரமின்மை, ஊடக அடக்குமுறைகள் தொடர்பில் பிரகீத் இறுதியாக போராடி வந்தார். இறுதி யுத்தத்தின் போது, இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பில் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருந்தார். இச்செயற்பாடுகளை தொடர்ந்தால் உயிராபத்து ஏற்படலாம் என பல பேர் எச்சரித்திருந்தனர். சொல்லுங்கள், இதனை நிறுத்துமாறு நான் அவரிடம் முதலிலே கூறியிருக்க வேண்டுமா? ஒரு ஊடக பணி இப்படி நடைபெறுவது நாட்டுக்கு நல்லதல்ல என நீங்கள் கருதுகிறீர்களா..?

இன்று பிரகீத்தை பற்றி நான் அரசியல் தலைமைகளிடம் பேசப்போனால் என்னை கண்டு அவர்கள் பயபப்டுகிறார்கள். ஆனால் இன்று உங்கள் முன் நான் பேசுவதால் நானும் ஒருவேளை காணாமல் போகலாம்.

1970 களிலேயே காணாமல் போகச்செய்தல் இலங்கையில் தொடங்கிவிட்டது. 1990 களில் தெற்கிலும் பரவிட்டது. பிரகீத் காணாமல் போன போது நான் முதலில் ஜனாதிபதியிடம் சென்றேன். பின்பு, நீதிமன்றம், மனித உரிமைகள் ஆணையகம்,  காவற்துறை, என அடுத்தடுத்து சென்றேன். ஒருவரிடமிருந்தும் நம்பிக்கைக்குரிய பதில் கிடைக்கவில்லை. எனக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் அனைவரும் நிராகரித்தனர். பிரகீத் வெளிநாடு ஒன்றில் வசிக்கிறார் என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம், முன்னால் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் கூறியிருந்தார். 7 மாதங்கள் போராட்டத்தின் பின்னர் அவரை நீதிமன்றத்திற்கு வரவைத்து, 'உங்களுக்கு எப்படி தெரியும்?, பிரகீத் இப்போது எங்கு இருக்கிறார்..?' என கேட்டோம். 'நம்பிக்கை உரிய புலனாய்வு தகவல் கிடைத்தது. சொன்னவர் பெயர் மறந்துவிட்டேன்' என்றார்.

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு சபையிடம் நான்கு தடவை கடிதம் எழுதி கோரிக்கை வைத்த பின்னர், 'தயவு செய்து எங்களுக்கு இனி கடிதம் எழுதி இடையூறு செய்ய வேண்டாம்' என்று பதில் கடிதம் வந்தது.

கவனத்தில் கொள்ளுங்கள். 'நான் தெற்கில் பிறந்து வளர்ந்தவர். ஒரு சிங்கள பெண். பௌத்த மதத்தை சேர்ந்தவர். (அதாவது இலங்கையின் பெரும்பான்மையினத்தவர்களில் ஒருவர்). எனக்கே நீதி கிடைக்காத போது, வடக்கில் சிறுபான்மையின தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒரு சாதாரண நபர் காணாமல் போனால் அவருடைய குடும்பம் எந்த வகையில் நீதியை எதிர்பார்த்து நம்பிக்கை கொள்ள முடியும்..?

அனைவரும் எங்களுடன் ஒன்றிணைடுங்கள். நாங்கள் போராடுவோம். எமக்கான அநீதிகளுக்கு நியாயம் கேட்போம். ஒரு நாள் நிச்சயம் அதை இலங்கையில் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கையுடன் தனது பேச்சை முடித்துக்கொண்டார்.

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு முயற்சிகள் வரவேற்கத்தகக்வை : Damiano 

 சுவிற்சராந்து மனித உரிமைகள் பாதுகாப்பு துறை அமைச்சின் பிரதிநிதி Damiano Sguaitamatti பேசிய போது, இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை (SLLRC) யின் படி மீள்நிவாரண பணிகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் எதிர்வரும் கிழக்கு, வடக்கு மாகாண தேர்தல்களின் முடிவுகளை நாமும் அவதானிக்கவுள்ளோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களின் செயற்பாடுகளை நோக்கவுள்ளோம். 2015 ற்குள் அவர்களது மீள்நிவாரண பணிகள் எவ்வாறு அமையபோகிறது என்பதை எதிர்பார்த்துள்ளோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என இலங்கை அரசு அடுத்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை சபையில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையினையும் எதிர்பார்த்துள்ளோம். இப்போது நான் கூறுபவை இலங்கையின் அரசியல் நிலைப்பாடு பற்றிய சுவிற்சர்லாந்து கொள்கைகள் பற்றியதல்ல. அவர்களது மனித நேய, சமூக அபிவிருத்தி பணிகளுடன் தொடர்புடைய எமது எதிர்பார்ப்புக்கள் பற்றியது என்றார்.

இலங்கை விவகாரம் சுவிஸ் பாராளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை : Martin

சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதி Martin Naef பேசுகையில், பாராளுமன்றத்தில் இலங்கை பற்றிய விவாதங்கள் தற்போது முன்னிலைப்படுத்தப்படுவது குறைந்துவிட்டது. அகதிகள் விவகாரம் எனும் நோக்கும் போது  சிரியா, வட ஆபிரிக்க பிரச்சினைகளுக்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறோம். மற்றும்படி பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலேயே எமது வெளிநாட்டு கொள்கைகள் தற்சமயம் அமைந்து வருகின்றன. ஆனால் என்னுடைய தனிக்கருத்தாக பார்தால், இங்கு அகதி அந்தஸ்து கோரும் இலங்கை அகதிகளை இன்றைய சூழ்நிலையில் நாட்டுக்கு திருப்பியனுப்ப கூடாது என்பேன். போர்க்குற்றங்கள், மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் அவர்களின் அக்கறை முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது. இவ்வாறான பொதுக்கருத்தரங்குகள் மூலம் இலங்கை அரசியல் நிலைமைகளை விவாதிப்பதை வரவேற்கிறேன். பாராளுமன்றத்தில் மீண்டும் இலங்கை விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார். பின்னர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட நிருபர்கள், பொதுமக்களிடம் கேள்வி கேட்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

நல்லிணக்க ஆணைக்குழு முயற்சி ஒரு முதற்படி : Damiano

Damiano விடம் ஒரு நிருபர் கேள்வி எழுப்பியபோது 'LLRC அறிக்கையினால் பெரிதாக மாற்றம் வந்துவிட்டதாக தெரியவில்லையே. அதன் பரிந்துரைகள் இன்னமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லையே... என்றார்.

அதற்கு பதில் அளித்த Damiano LLRC அறிக்கை பரிந்துரைகள் சரியான பாதைக்கு இட்டுச்செல்கிறதா என ஆராய்வதற்கு முன்பு, ஒரு பாதையில் செல்ல பயணித்திருக்கிறது என்பதையே கவனத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு முதற்படி. ஒரே இரவில் மாற்றம் ஏற்பட்டுவிடாது என்றார்.

தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதிகளை பற்றி Martin

பாராளுமன்ற அமைச்சு பிரதிநிதி Martin Naef இடம் மற்றுமொருவர் கேள்வி எழுப்பிய போது, 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த சூழ்நிலையில், சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த பெரும்பாலான தமிழ் இளைஞர்களின் அகதி அந்தஸ்து கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களது மீள் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு இனி என்ன நடைபெறலாம் என கேள்வி எழுப்பினார்.
Martin Naef
சில வினாடிகள் அமைதியின் பின்னர் பதில் அளித்த Martin Naef, தற்காலிக வதிவிட அனுமதியில் இருப்பவர்கள், தற்காலிகமாக பாதுகாப்பான அடிப்படை வசதிகளுடன் இங்கு தங்கியிருப்பதற்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்படுதல் தொடர்பிலான அகதி அந்தஸ்து நிராகரிப்பு முடிவுகள் நீதிமன்ற தீர்ப்புக்களை பொருத்து மாறுபடுகிறது. சுவிற்சர்லாந்தின் வெளிவிவகார கொள்கை தொடர்பான பலநூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட புத்தகமிது. பாருங்கள். ஒரே ஒரு பக்கத்தில் ஒரு சில வரிகளில் மாத்திரமே இலங்கை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை வைத்து கொண்டு தீர்மானமான எனது பதிலை வழங்விட முடியாது. இலங்கை என்ற ஒட்டுமொத்த நாட்டுக்கு நீங்கள் எதிரி என்ப்தை விட,  நாட்டுக்கு திரும்பினால் உங்களுக்கு தனிப்பட்ட வகையில் உள்ள உயிர்பத்து என்ன என்பதையே ஒவ்வொரு வழக்கு விசாரணைகளிலும் கவனத்தில் கொள்ளப்படுகிறது என்றார்.
வெளியிலிருந்து பார்க்கும் இலங்கை வேறு : சந்தியா

இறுதியாக சந்தியாவிடம் என்ன கூறவிரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்ட போது,

'இலங்கையில் அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் 'ஏன் சிறையில் இருக்கிறோம் என்றே தெரியாமல் பல வருடங்களாக சிறையில் வாடுவதாகவும்,  எங்கள் மீது வழக்காவது பதியுங்கள் என்ற கோரிக்கையுடனும் போராட்டம் தொடங்கியிருந்தார்கள். அதன் போது தாக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்தது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களில் ஒருவரின் சடலத்தை பெற்றோர் தமது வீட்டுக்கு கொண்டுவரக்கூட நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. தற்போது இதே சம்பவத்தில் மற்றுமொருவர் சுயநினைவின்றி இருக்கிறார். இலங்கையின் வடக்கில் ஒரு குழந்தை தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்கும் இராணுவ அனுமதி பெறவேண்டியுள்ளது'. SLLRC அறிக்கை உலகுக்கு என்னவேண்டுமானாலும் கூறட்டும். உலகம் பார்க்கும் இலங்கைக்கும், உள்ளே செயற்பட்டுக்கொண்டிருக்கும் இலங்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.  தொடர்ந்து போராடுவோம். எமக்கான நீதி கிடைக்கும் வரை, குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் வரை போராடுவோம். எம்முடன் ஒன்றிணைந்திருங்கள். ஆதரவு தாருங்கள். இந்த அச்சுறுத்தல்கள் இல்லாத அனைத்து இனத்தவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு இலங்கை நிச்சயம் ஒரு நாள் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதற்கு இலங்கை மீதான சர்வதேச பார்வையும், அழுத்தமும் மிக முக்கியமானது.  அப்படி ஒரு அமைதியான இலங்கையில் உங்கள் அனைவரையும் நான் மீண்டும் சந்திக்கிறேன் என்றார்.

இக்கருத்தரங்கு முடிவடைந்த போது, அச்சுறுத்தலுக்கு உள்ளானோர் அமைப்பின் பிரதிநிதி  Anna Leissing இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். அவர்களுடைய அமைப்பின் சார்பில் சாந்தி எக்னெலிகொடவிற்கும், சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தை பிரதிநிதிகளுக்கும் நினைவு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வு முடிவடைந்தபோது நடந்த சில பிரத்தியேக  கலந்துரையாடல்களில் 'மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது காணாமல் போன தனது மகனை பற்றி தந்தையொருவர், அச்சுறுத்தலுக்கு உள்ளானோர் அமைப்பிடம் முறையிடுவதற்கு தயங்கியபடி காத்திருந்தார். ஏற்கனவே இது பற்றி முறையிட்டுள்ளீர்களா என கேட்ட போது, சர்வதேச மன்னிப்பு சபை முதல் அனைத்து மனித உரிமை அமைப்புக்களிடமும் முறையிட்டுவிட்டேன். இவர்களிடமும் ஒரு முறை கேட்டுப்பார்ப்போமே என ஒருவித் ஏக்கத்துடன் அவர் உணர்ச்சிவசப்பட்ட போது,  'காணாமல் போனோர்  தினம், ஒருநாள் அனுஷ்டிக்கப்படுவதோடு முடிவடைந்துவிடுகிறதா?' என்ற கேள்வி மனதுக்குள் ஓங்கி அறைந்து கொண்டிருந்தது.
- பேர்னிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்பு செய்தியாளர்

எதிர்வரும் செப்.14 திகதி வரை பிரகீத் எக்நெலியகொடவின் சித்திர படைப்புக்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. கண்காட்சி நடத்தப்படும் இடம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு 
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலியகொட வரைந்த கேலிச்சித்திரங்களின் கண்காட்சி (புகைப்படங்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக