ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கலியுக கண்ணகியை காண வாங்க?படங்களுடன்

உல்லாசமாக இருந்த படங்களை காட்டி மிரட்டியதால் காதலனை கொலை செய்ய ரூ.5 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவிய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். இந்த சதித்திட்டத்தில், மாணவியின் கண் முன்னால் பிடிபட்ட காதலன் தப்பி ஓடிவிட்டார். அவரது நண்பர் படுகொலை செய்யப்பட்டார்.


சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த திடுக்கிடும் பயங்கரம் :
வேலூரை சேர்ந்தவர் சீனிவாசன். மிராசுதார். பெங்களூர் ஜாலஹள்ளியில் இவருடைய மனைவி, மகன் மற்றும் மகள் சுஷ்மா (22) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

சுஷ்மா பெங்களூர் மல்லேசுவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.எம் முதலாம் 
ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரியில் சேர்வதற்கு முன்னதாக பி.யூ.சி.  இரண்டாவது ஆண்டு இறுதி தேர்வில் சுஷ்மா அதிக மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதற்காக அவருக்கு சீனிவாசன் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி பரிசாக கொடுத்தார். அந்த காருக்கு டிரைவராக ஜாலஹள்ளியை சேர்ந்த மஞ்சுநாத் என்ப வரை நியமித்தார்.

கல்லூரிக்கு செல்லும்போதும், வெளியில் செல்லும்போதும் தனியாக இருந்ததால் மஞ்சுநாத்துக்கும், சுஷ்மாவுக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

பெற்றோருக்கு தெரியாமல் கோவா, டெல்லி, மங்களூர் போன்ற இடங்களுக்கு சுஷ்மாவும், மஞ்சுநாத்தும் சென்று உல்லாசமாக இருந்தனர். அங்கு இருவரும் கணவன்-மனைவி என்று கூறிக்கொண்டு சந்தோஷமாக இருந்தனர்.


இந்த நிலையில், திடீரென சமீப காலமாக மஞ்சுநாத்துடன் நெருங்கிப் பழகுவதை சுஷ்மா நிறுத்தி விட்டார்.

தன்னிடம் இருந்து சுஷ்மா விலகிச் செல்வதை உணர்ந்த மஞ்சுநாத், அதுபற்றி காதலியிடம் கேட்டார். அதற்கு, உன்னுடன் பழகுவதை விரும்ப வில்லை. நீயும் பழையதை மறந்து விடு என்று சுஷ்மா கூறி விட்டார்.

காதலியை மறக்க முடியாத மஞ்சுநாத், காதலிக்கும் போதும், சுற்றுலாவிற்கு சென்றபோதும் உன்னுடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த போட்டோவை வெளியிடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் மேலும் வெறுப்படைந்த சுஷ்மா, மஞ்சுநாத்துடன் உள்ள காதலை முற்றிலும் துண்டித்து விட்டார்.

ஆனால் என்னால் உன்னுடனான காதலை மறக்க முடியாது என்றும், நீயும் என்னை காதலித்துத்தான் ஆகவேண்டும் என்றும் மஞ்சுநாத் கெஞ்சினார். அத்துடன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கூறி சுஷ்மாவை மஞ்சுநாத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தனது நண்பரான ஜாலஹள்ளியை சேர்ந்த உசேன் (24) மூலமும் சுஷ்மாவை வற்புறுத்தி வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சுஷ்மா, காதலனையும், அவரது நண்பரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

இந்த கொலையை நிறைவேற்ற தன்னுடைய பள்ளித்தோழன் அஜய்குமார் என்ற ஜாக்கியின் உதவியை நாடினார். மஞ்சுநாத்தையும், அவரது நண்பரையும் கொலை செய்ய ஜாக்கி கூலிப் படையை ஏற்பாடு செய்தார். கூலிப்படைக்கு சுஷ்மா ரூ.5 லட்சம் கொடுத்தார்.

சுஷ்மா மற்றும் ஜாக்கியின் திட்டப்படி, தனது காதலன் மஞ்சுநாத்தை சுஷ்மா செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஜாலஹள்ளி எச்.எம்.டி ஜங்ஷனுக்கு வரும்படி அழைத்தார். அதன்படி கடந்த மாதம் (மே) 11-ந் தேதி இரவு மஞ்சுநாத், தனது நண்பர் உசேனுடன் அங்கு சென்றார். அங்கு நின்ற சுஷ்மாவின் காரில் 2 பேரும் ஏறிக்கொண்டனர். காரில் சுஷ்மாவும், ஜாக்கியும் இருந்தனர்.

சிறிது தூரம் கார் சென்றபோது ஜாக்கி ஏற்பாடு செய்த கூலிப்படையினர் 4 பேர் காருக்குள் ஏறினர். இதனால் ஏதோ விபரீதம் நடக்க இருப்பதை உணர்ந்த மஞ்சுநாத், சுதாரித்து கொண்டு கார் சென்று கொண்டிருந்தபோதே கீழே குதித்து தப்பி ஓடி விட்டார்.

கூலிப்படையை சேர்ந்த கும்பலிடம் உசேன் மட்டும் மாட்டிக் கொண்டார். உடனே அவர்கள் ஓடும் காரில் வைத்து, சுஷ்மா கண் எதிரிலேயே உசேனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். அவரது உடலை தொட்டபள்ளாப்புராவில் வீசி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

உசேன் கடத்தப்பட்ட விஷயம் குறித்தோ, கொலை சம்பவத்தில் இருந்து, தான் தப்பி வந்தது குறித்தோ மஞ்சுநாத் போலீசாருக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை.

2 நாட்கள் கழித்து தொட்டப்பள்ளாப்புராவில் உசேன் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து ஜாலஹள்ளி மற்றும் தொட்டபள்ளாப்புரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் உசேன் கொலை குறித்தும், கொலைகாரர்களிடம் இருந்து தான் தப்பியது குறித்தும் மஞ்சுநாத் போலீசில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் சுஷ்மாவையும், கூலிப்படையையும் தீவிரமாக தேடினர். பல நாட்களாக போலீசார் தீவிரமாக துப்பு துலக்கியதில், சுஷ்மா வேலூரில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று சுஷ்மாவை கைது செய்து, பெங்களூர் கொண்டு வந்தனர்.


சுஷ்மாவிடம் நடத்திய விசாரணையில், அவர் ரூ.5 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி தன் காதலனையும், அவரது நண்பரையும் கொலை செய்ய முயன்ற திடுக்கிடும் தகவலும், காதலன் ஓடும் காரில் இருந்து குதித்து தப்பி ஓடியதும், அவரது நண்பர் கூலிப்படையிடம் சிக்கிக்கொண்டு பலியானதும் வெளியானது.

சுஷ்மா கொடுத்த தகவலின்பேரில் சுஷ்மாவின் நண்பரும், பள்ளித்தோழருமான அஜய்குமார் என்கிற ஜாக்கி (20), கூலிப்படையை சேர்ந்த தீபக் (19), அபிஷேக் (19), லட்சுமண் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கல்லூரி மாணவி ரூ.5 லட்சம் கொடுத்து தன் காதலனை கொலை செய்ய முயன்றதும், அவரது நண்பரை கொலை செய்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக