ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய அரசியல்வாதிகள் இலங்கைக்கு வரட்டும்.. நாங்களும் ஒரு கை பார்க்கிறோம்: ஐக்கிய தேசியக் கட்சி


 Lankan Oppn Asks Govt Protest Minister
கொழும்பு: தமிழகத்தில் இலங்கை அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதைப் போல் தங்கள் நாட்டுக்கு வருகை தரும் இந்திய அரசியல்வாதிகளுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. ஜான் அமரதுங்க கூற்யுள்ளதாவது:
அண்மையில் இலங்கை அமைச்சர் ரெஜினால்ட் கூரே இந்தியாவிற்கு சென்ற போது தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் அங்கிருந்து நாடு திரும்ப வேண்டியாயிற்று.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை அரசியல்வாதிகளினுடைய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது இந்திய அரசின் கடமை. இந்த நடவடிக்கைக்கு இந்திய தூதரிடம் நாடாளுமன்றம் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக