சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ளது அரிசிப்பாளையம் முல்லாக்காடு தம்மண்ணன் ரோடு. இந்த பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(வயது 24). இவருக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. இதில் ரூ.7 கோடி பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசை பெற ரூ.6 லட்சம் பணம் கட்ட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
அவரது பிணத்தை சேலம் பள்ளப்பட்டி போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். கோபிநாத் தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதமும் எழுதி வைத்து இருந்தார். இதை வைத்து விசாரணை நடந்தது.
இந்த நிலையில் நேற்று முதற்கட்ட விசாரணை முடிந்தது. பின்னர் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்கு விசாரணை விவரம் மற்றும் பைல்களை சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலியிடம் ஒப்படைத்தார்.
இதை விசாரித்த அவர் இந்த வழக்கை விசாரிக்க சேலம் சைபர் கிரைம் போலீசுக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமஆண்டவர் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக