ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எஸ்.எம்.எஸ். இல் வந்த ரூ.7 கோடி பரிசுக்கு கடன்வாங்கி 6 லட்சம் பணத்தை கட்டியவரின் பரிதாப முடிவு.



சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ளது அரிசிப்பாளையம் முல்லாக்காடு தம்மண்ணன் ரோடு. இந்த பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(வயது 24). இவருக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. இதில் ரூ.7 கோடி பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசை பெற ரூ.6 லட்சம் பணம் கட்ட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இது உண்மை என நம்பிய அவர் கடன் வாங்கி ரூ.6 லட்சம் பணத்தை கட்டினார். ஆனால் அவருக்கு ரூ.7 கோடி பணம் வரவில்லை. இதனால் கோபிநாத் ஏமாற்றம் அடைந்தார். அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை செய்தனர். இதனால் கோபிநாத் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பிணத்தை சேலம் பள்ளப்பட்டி போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். கோபிநாத் தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதமும் எழுதி வைத்து இருந்தார். இதை வைத்து விசாரணை நடந்தது.
இந்த நிலையில் நேற்று முதற்கட்ட விசாரணை முடிந்தது. பின்னர் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்கு விசாரணை விவரம் மற்றும் பைல்களை சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலியிடம் ஒப்படைத்தார்.
இதை விசாரித்த அவர் இந்த வழக்கை விசாரிக்க சேலம் சைபர் கிரைம் போலீசுக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமஆண்டவர் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக