பங்களாதேஷை சேர்ந்த ஆறே வயதாகும் சிறுவன் கணினி புறோகிராமிங் துறையில் நிபுணராக விளங்குகிறான்.
நசிக் ஃபர்ஹான் ரூப்கோதா என்ற சிறுவனே தனது சிறு வயதிலேயே கணினி நிகழ்ச்சி நிரலாக்கத்தில் சக்கை போடு போடுகிறான்.
இவனது திறமையை மைக்றோசொப்ட் நிறுவனமும், கின்னஸ் நிறுவனமும் அங்கீகரித்திருப்பது மேலதிக சிறப்பாகும்.
தனது 3 வது வயதிலேயே மைறோசொப்ட் மென்பொருட்களில் கைதேர்ந்து விளங்கிய இச்சிறுவன், தற்போது C++ மொழியிலும் தேர்ச்சி பெற்றுள்ளான்.
இவனது தனித்திறமையை சிறுவயதிலேயே அடையாளம் கண்டுகொண்ட இவனின் பெற்ரோர்கள், இவனை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்தே கணினி அறிவு புகட்டி வருகிறார்கள்.
எதிர்காலத்தில் கணினி துறையில் தனது மகன் புரட்சி செய்வான் என குறித்த சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக