மெக்சிகோவில் வடக்கு பகுதியில் மான்டெர்ரி நகரம் உள்ளது. அமெரிக்காவின் எல்லையில் உள்ள அந்த நகரின் நெடுஞ்சாலையில் கருப்பு பிளாஸ்டிக் பைகள் கிடந்தன.
அவற்றை கைப்பற்றிய போலீசார் அவிழ்த்து பார்த்தனர். அதில், தலை துண்டித்த நிலையில் பிணங்கள் இருந்தன. இதுபோன்று 49 பேர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் முக்கிய தொழிலாக உள்ளது. இதனால் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது சகஜம். அது போன்ற தகராறில் இந்த படுகொலைகள் நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக