ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!

 Perarivalan Scores 1096 Marks 2 Exams   ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்டுள்ள பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியோர் பிளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.



ராஜீவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன், முருகன் ஆகியோர் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தனர். சிறையிலேயே இவர்கள் மற்ற கைதிகளுடன் சேர்ந்து தேர்வு எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் பேரறிவாளன் சிறப்பான முறையில் மதிப்பெண்கள் வாங்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அவர் மொத்தம் 1096 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் 185, ஆங்கிலத்தில் 169, வரலாறு பாடத்தில் 183, பொருளாதாரத்தில் 182, வணிகவியலில் 198, அக்கவுண்டன்சியில் 179 மதிப்பெண்களை எடுத்துள்ளார்.

அதேபோல முருகன் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் வணிகவியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக