ராஜீவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன், முருகன் ஆகியோர் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தனர். சிறையிலேயே இவர்கள் மற்ற கைதிகளுடன் சேர்ந்து தேர்வு எழுதியிருந்தனர்.
இந்த நிலையில் பேரறிவாளன் சிறப்பான முறையில் மதிப்பெண்கள் வாங்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அவர் மொத்தம் 1096 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழில் 185, ஆங்கிலத்தில் 169, வரலாறு பாடத்தில் 183, பொருளாதாரத்தில் 182, வணிகவியலில் 198, அக்கவுண்டன்சியில் 179 மதிப்பெண்களை எடுத்துள்ளார்.
அதேபோல முருகன் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் வணிகவியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக