ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு கோடிஸ்வர கிரிக்கெட் வீரருக்கு நோய் என்றதும் துடித்தவர்களுக்கு.. வில்வித்தையில் தங்கம் வாங்கிய பெண்ணின் பரிதாப நிலை.


ஒரு கோடிஸ்வர கிரிக்கெட் வீரருக்கு நோய் என்றதும் துடித்து விட்டார்கள் இந்திய அரசியல்வாதிகளும், ஊடகங்களுக்கும் மற்றும் விளையாட்டுத்துறையும். 
ஆனால் இந்தியாவுக்காக வில்வித்தையில் தங்கபதக்கம வாங்கிய இந்த தங்கப்பெண் தன் வீட்டை பழுதுபார்க்க பண வசதி இல்லாமல் தனக்கு தங்கம பெற்றுததந்த வில்லையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்..

இந்திய விளையாட்டுத்துறைக்கு கிரிக்கெட் விரர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிவார்களா..?
கிரிக்கெட் வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு எனனென்ன பரிசுகள் தரப்படுகின்றன..? வில்வித்தையில் இந்தியாவுக்காக தங்கம வாங்கி கொடுத்த ஒரு விராங்கனைக்கு இந்திய அரசால் ஒரு வீடு கூடவா தரமுடியவில்லை.?
அண்டை நாட்டில் இருப்பவர்களுகெல்லாம் விருது தரும் இந்த இந்திய அரசாங்கத்திற்கு இந்த விராங்கனைகளைப் போன்றவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா...?
கொலவெறி பாடலுக்காக சம்பந்தபட்டவர்களோடு விருந்து சாப்பிடும் மாண்புமிகு இந்திய பிரதமருக்கு இந்த விளையாட்டு வீராங்கனை தெரியவில்லையா...?
இந்த வீராங்கனையின் பரிதாப நிலையைப் பற்றி கேள்விப்படும் மற்ற வளரும் விளையாட்டு வீரர்களின் மனநிலை என்னவாகும்...?
இப்படியே போனால் இநதியாவுக்கு கிரிக்கெட் தவிர மற்ற எந்த விளையாட்டிலும் வெள்ளி டம்ளர் கூட கிடைக்காது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக