ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

)))))...வீணடிக்கப்படும் உணவு...(((((

 

உங்களது தட்டில் இருக்கும் சோற்று பருக்கை.


பயிராக இருக்கும் போது எலிகளிடமிருந்து தப்பித்து,

கதிரடிக்கும் போது தப்பித்து,

மூட்டையாக கட்டும் போதும் தப்பித்து,

அரைக்கும் போதும் தப்பித்து,

புடைக்கும் போதும் தப்பித்து,


கடையில் விற்கும் போதும் சிந்தாமல் தப்பித்து,

சமைக்கும் போதும் கீழே கொட்டாமல் தப்பித்து,

உங்களது தட்டில் வைக்கும் போதும் சிதறாமல் தப்பித்து,


இத்தனை இடத்தில் "தப்பித்து"

உங்களுக்கான உணவாக அது வரும் போது

அதை "வேண்டாம்" என்றோ அல்லது "போதும்" என்றோ

வீணடிப்பது நியாயமா.....?????


அந்த உணவில்லாமல்

இந்த உலகில் பட்டினி கிடக்கும் உயிர்கள்

எத்தனை என்று நீங்கள் அறிவீரா...????


...........எனவே........


....."உணவை வீணடிக்காதீர்கள்".....

."வீணாக்கப்படும் உணவு உங்களை சபிக்கின்றது".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக