ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நவிபிள்ளையை நானும் சந்திப்பேன்: எழிலன் மனைவி


இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும், வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரனுடன் சந்திக்கவுள்ளதாக அனந்தி சசிகரன் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் வடபகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது, முன்னாள் போராளி எழிலனின் மனைவியாகிய தன்னை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அச்சந்திப்பின் போது, போரின் சாட்சியங்களா இருக்கும் தாங்கள், காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள், முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளேன்' என்று அவர் மேலும் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக